சென்னையில் லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்விபத்து ஏற்பட்டு கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வந்த மருத்துவர் சரணிதா, ஒரு மாத பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்.
அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் விடுதியில் லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார், சரணிதா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.