மஞ்சுமல் பாய்ஸ் குழுவினர் இளையராஜாவை சந்தித்து பேசியிருந்தால் பாடல் உரிமம் குறித்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி, சத்தியராஜ், நடிகை மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் ஆண்டனி, தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டால் நிச்சயம் வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பாடலை பயன்படுத்துவது குறித்து அனுமதி கேட்டிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.