டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கார் உள்ளிட்ட வாகனங்களை கழுவுவதன் மூலம் தண்ணீரை வீணடித்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சட்ட விரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தண்ணீரை வீணடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து 200 குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.