டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஹவாலா தரகர்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
2022 கோவா சட்டப்பேரவை தேர்தலின்போது ஆம் ஆத்மியின் பிரச்சாரத்திற்காக ஹவாலா பணப்பரிமாற்றம் செய்ததாக வினோத் சவுகான் என்பவரை கடந்த 4-ம் தேதியன்று அமலாக்கத்துறை கைது செய்தது.
வினோத் சவுகானின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்ததாகவும், அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், வினோத் சவுகானுக்கும் நேரடி உரையாடல் இருந்ததாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்த உத்தரவை வரும் 4-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.