குமரி மாவட்டம் ஆறுகாணியில் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்து வரும் மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழக- கேரள எல்லைப்பகுதியான ஆறுகாணி மலைப்பகுதியில் கஞ்சா போதையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் முன் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர்.
சத்தம் கேட்டு வெளியே வந்தவர்களை மர்ம நபர்கள் மிரட்டியதால் அச்சமடைந்த மக்கள் வீட்டுக்குள் சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.