ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் ரஜோரி மாவட்ட வனப்பகுதிகளில் பரவி வரும் காட்டு தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வனப் பாதுகாப்புப் படை துணை இயக்குநர் பல்வந்த சிங்,
கோடை காலம் என்பதால் காட்டு தீ பரவுதல் அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 8 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
எத்தகைய நிலையையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் வனப்பாதுகாப்பு படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.