நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஒடிசாவில் 41 பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் , ஜார்சுகுடா நகரில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
சோனாபூர் மற்றும் மல்கங்கிரியில் தலா 45 புள்ளி 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்தனர்.
ரூர்கோலாவில் மட்டும் 12 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.