கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே புரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் விக்கல் எடுத்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கைபண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் சனந்தனன், கட்டிட தொழிலாளியான இவர்
வீட்டில் புரோட்டா சாப்பிட்டுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென விக்கல் ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.