வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்துத்துவா சித்தாந்தவாதிகளை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ராகுல் காந்தி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனையடுத்து ராகுல் காந்தி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அக்ஷி ஜெயின் உத்தரவிட்டார்.