சிவகங்கையில் வங்கி வாசலில் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லாவயல் கிராமத்தை சேர்ந்த நாகநாதன் என்பவர், இந்தியன் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
பின்னர் இவர் வெளியே வந்து இரு சக்கர வாகனத்தில் பணத்தை வைக்கும் போது நோட்டமிட்ட மர்ம நபர்கள் நாகநாதனின் கவனத்தை திசை திருப்பி பணப்பையை பறித்துகொண்டு தப்பியோடினர்.
இது குறித்து நாகநாதன் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.