சிவகங்கை மாவட்டம், தேரளப்பூர் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தரக்கோரி அப்பகுதிமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
வக்கணக்கோட்டை கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பாக World Vision of india என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அப்பகுதி மக்கள் தரைப்பாலம் ஒன்றை அமைத்தனர்.
இந்த பாலத்தின் மூலம் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில் தரைப்பாலம் சமீப காலமாக சேதம் அடைந்து காணப்படுகின்றது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.