திண்டுக்கல் அருகே 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி அடுத்த சாமிநாதபுரம் பகுதியில் உள்ள தர்மராஜ் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 6ஆம் தேதியன்று 20 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட அஜல் பிரவீன், யாழின்ராஜ், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.