மயிலாடுதுறையில் கடும் வெயில் காரணமாக விவசாயிகள் பயிரிட்ட முந்திரி, பனை மரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சுமார் 150 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட முந்திரி, பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.