தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி போபால் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் காலிறுதி சுற்றில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின, அதில் 4:1 என்ற கோல் கணக்கில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் , பெங்களூரு கனரா பேங்க் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.