ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற இராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 35 லட்சத்து 11 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கம், 77 ஆயிரத்து 500 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.