ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு கோயில்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலின் செயல் அலுவலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், செண்பகத்தோப்பில் அமைந்துள்ள பேச்சியம்மன் மற்றும் காட்டழகர் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதால் தடை விதிக்கக் கோரப்பட்டிருந்தது.