தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.