திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கோயிலில் இருந்த செப்புத் தகடு கடந்த 1957ஆம் ஆண்டில் மாயமானது. இந்த தகட்டில் சோழர் காலம் குறித்த பல்வேறு ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கோயில் ஸ்ரீரங்கம் கோயிலின் உப கோயில் என்பதால் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆய்வு நடத்தினர். மேலும் கூடுதல் தகவல் ஏதேனும் கோவில் நிர்வாகத்திடம் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தனர்.