ராமநாதபுரத்தில் உறவினரை அடித்த நபரை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அடுத்த புழுதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற இளைஞரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கார்த்திக் தனது உறவினரான மோகனிடன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன், கார்த்திக் ராஜா உள்பட 4 பேருடன் சேர்ந்து கோபால்சாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன், கார்த்திக் ராஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
















