நீலகிரி மாவட்டம், கூடலூரில் யானை வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
யானைகளுக்காக புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற வனத்துறையின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், கூடலூரில் யானைகளின் வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணி வர்மா என்ற இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.