தஞ்சையில் வறண்டு கிடக்கும் கோயில் குளத்தை தூர்வாரக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ராமலிங்க சுவாமி திருக்கோவில் குளம், தண்ணீர் இல்லாமலும், குப்பைகளால் நிறைந்து மாசடைந்து காணப்படுகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கோயில் குளத்தை தூர்வாரி, தண்ணீர் நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.