திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.