தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தன் மீது புகாரளித்த காரணத்தால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெற்கு திட்டம் குளத்தை சேர்ந்தவர் பாலமகேஸ்வரி. இவருடைய கணவன் சின்னமருது மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி பாலமகேஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலமகேஸ்வரி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னமருது, பாலமகேஸ்வரியை கட்டையால் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.