ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள வீரசக்கதேவி அம்மன் கோயில் விழாவை ஒட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் உற்சவ விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம், அதே போல் இந்தாண்டும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
விழாவை ஒட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. தேன் சிட்டு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது