ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
அதன்பின்னர், ஜம்மு-காஷ்மீர் பேரவை கலைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளான நிலையில், விரைவில் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.