திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மஞ்சநாயக்கன் பட்டி, குமாரபாளையம், மணக்காட்டூர், குஜிலியம்பாறை, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் பல லட்ச ரூபாய் அளவில் கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் காரணமாக, அவ்வப்போது அடிதடி போன்ற குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ஆகையால், கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.