தஞ்சை அருகே செங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு செங்கிப்பட்டி மேம்பாலத்தின் தெற்கு பகுதி பக்கவாட்டில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் மேம்பாலத்தை சீரமைத்து, கடந்த மார்ச் மாதம் முதல் செங்கிப்பட்டி மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் மேம்பாலத்தின் தெற்குப்பகுதி பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.