ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தீவிரவாதிகளின் வீடு தீப்பற்றி எரிந்தது.
புல்வாமா மாவட்டம் நிஹாமா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சோதனை நடத்தியபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், தீவிரவாதிகள் தங்கியுள்ள வீடு தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.