சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய கர்நாடக அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ள நாகேந்திரா, சுமார் 188 கோடி ரூபாய் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பூதாகரமான நிலையில், விசாரணை நடந்து வருவதால் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.