தமிழக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ரங்கநாயகலு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மத்திய பாஜக அரசு பற்றி மக்களிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி விவாதங்களில் தலைப்புகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்கள், அராஜகங்கள் குறித்து ஊடகங்கள், விவாதம் நடத்தாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.