பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பங்கேற்பதற்காக 15 வீரர், வீராங்கனைகள் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்திய அணியில் இருந்து பங்கேற்பதற்காக பிஸ்டல் மற்றும் ரைபிள் என தகுதி சுற்று நடத்தப்பட்ட்டது.
இதில்,சிறப்பாக செயல்பட்டவர்களின் அடிப்படையில் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டடுள்ளது.
அதன்படி ரைபிள் பிரிவில் 8 பேரும்,பிஸ்டல் பிரிவில் 7 பேர் என மொத்தம் 15 பேர் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பிடித்துள்ளனர்.