உக்ரைன் உடனான மோதலில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இரு இந்தியர்கள் பலியானதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளையும் முன்கூட்டியே விடுவித்து நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் மற்றும் அதிகாரிகளிடம் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், ரஷ்யாவில் வேலை தேடும் போது இந்திய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேடடுக்கொண்டுள்ளனர்.