கேரளாவில் ஜீப்ரா லைன் வழியாக சாலையைக் கடந்தபோது இளம்பெண் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செருவண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள ஜீப்ரா லைனில் கொளத்தறையைச் சேர்ந்த பாத்திமா ரினா என்ற 18 வயது இளம்பெண் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, வேகமாக வந்த தனியார் பேருந்து, இளம்பெண் மீது மோதியது. இதில், நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் இளம்பெண் உயிர் தப்பினார். இந்நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநர் சல்மானின், ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.