நாகையில் குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து, விவசாயிகள் கதவணைக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
அப்போது கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததது ஏன்? என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
டெல்டா மாவட்டங்களில் நான்கரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இருந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காதததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.