ஒரு வார காலத்திற்குள் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறக்காவிட்டால், கர்நாடகவுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து மாநிலத்தை இருளில் மூழ்கடிப்போம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி எச்சரித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் போராட்டதை ஒடுக்க நினைத்தால் தமிழகத்தின் உரிமைக்காக ரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம் என்றார்.
மேலும், விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் வேலுசாமி தெரிவித்தார்.