நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சசர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சராக பணிகளை தொடங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மீண்டும் பாதுகாப்பு அமைச்சக பொறுப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற விரும்புவதாக தெரிவித்த அவர், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 50,000 கோடி ரூபாய்க்கு கொண்டு செல்வதே இலக்கு என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.