தென்காசி மாவட்டம், குற்றால அருவியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து வரப்பட்ட 10 அடி நீள மலைப்பாம்பு அருவிக்கரையின் அருகே உள்ள மண்டபத்தில் பதுங்கி கிடந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், அங்கு மலைப்பாம்பு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் மலைப்பாம்பானது அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.