சீன பெயர் சூட்டல் - மத்திய அரசு பதிலடி!
Sep 30, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன பெயர் சூட்டல் – மத்திய அரசு பதிலடி!

Web Desk by Web Desk
Jun 14, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசத்தில் பல இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியதற்குப் பதிலடியாக, திபெத்தில் உள்ள 30 இடங்களில் மறு பெயர் சூட்டும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சீனாவின் அடாவடி செயலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதிலடி கொடுத்து இருப்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

இந்தியாவின் வடகிழக்கே உள்ள மாநிலமான அருணாசல பிரதேசம் சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.

1962ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அவர்களின் நினைவாக வாலாங் நகரத்தில் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு காஹு கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது. மேலும் சுற்றுலா விடுதிக்கு அருகில் புதிய ராணுவப் பாலமும் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா – சீனாவுக்கும் இடையே பொதுவான எல்லைக்கோடு இல்லாத நிலையில்,
கடந்த 2023ஆம் ஆண்டு சீனா நமது நாட்டின் இறையாண்மையைக் குறிவைத்து ஓா் எல்லை வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் பகுதிகளான வடக்கிலுள்ள லடாக், கிழக்கிலுள்ள அருணாசல பிரதேசம் ஆகியவற்றை சீனா தனக்குச் சொந்தம் என குறிப்பிட்டிருந்தது.

மேலும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் சுமார் 30 இடங்களுக்கு மறு பெயர் சூட்டும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஆனால், சீனப் பெயர்களை உள்ளூர் மக்கள் எதிர்ப்பதாகவும், மறு, பெயர் பட்டியலுடன், எல்லை கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் இந்தியாவின் புதிய வரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சீனா, கடந்த மார்ச் மாதம் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் மறுபெயர் சூட்டியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 3வது முறையாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, இந்தியா – சீனா இடையிலான பிரச்னை மேலும் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Chinese name calling - central government response!
ShareTweetSendShare
Previous Post

பரோட்டா சூரி அல்ல… மிரட்டல் ஹீரோ!

Next Post

குவைத் தீ விபத்தில் கருகிய உயிர்கள்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies