மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொழையூர் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி பக்தர்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது.