கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பத்தனம்திட்டா கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திய ஒருவர், வேறொரு மேஜையில் மது அருந்திக் கொண்டவர்களின் உணவுப் பொருட்களை எடுத்துள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.