தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 50 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையைடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் மற்றும் மோகன்ராம், அடுத்தடுத்துள்ள வீடுகளில் வசிக்கும் இவர்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது செந்தில் வீட்டிலிருந்து 50 சவரன் நகைகள் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம், சிசிடிவி ஹார்டு டிஸ்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மோகன்ராம் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பி சென்றதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.