அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையை சாட்சியாக சேர்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மனு மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி அமலாக்கத்துறை மனுவிற்கு எதிராக வாதாடினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டார்.