ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள பூங்குழலி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
எஸ்.கீரந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூங்குழலி அம்மன் கோயிலில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு புரவி எடுப்பு விழா மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.