மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றினால் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக் காலம் 2028 ஆம் ஆண்டு நிறைவுபெறும் நிலையில், அவர்களை சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி இப்போதே வெளியேற்றுவதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும், தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தனிப்பட்ட முதலாளிகளுக்கு பயன்படுவதற்காகவே மாஞ்சோலை தேயிலை தோட்டம் பறிக்கப்படுவதாகவும் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டினார்.