நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதிச் செயலர், பொருளாதார விவகாரங்கள், வருவாய், நிதிச் சேவைகள் மற்றும் நிறுவன விவகாரங்கள் துறைகளின் செயலர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.