காஞ்சிபுரத்தில் பெண் தலைமை காவலரை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுகாவேரிபாக்கம் பகுதியில் வசித்து வரும் டில்லிராணி, விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், கணவர் மேகநாதனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் பணிமுடித்துவிட்டு ஏடிஎம் மையத்துக்கு சென்ற டில்லிராணியை அவருடைய கணவன் மேகநாதன் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேகநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.