அரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கிரண் சவுத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி பாஜகவில் இணைந்தனர்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
இரண்டு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.