NET தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் UGC-NET தேர்வு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. ஆயிரத்து 205 மையங்களில் நடந்த இந்த தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாகவும், தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி நடந்த NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சகம் அறிவித்தது.
மேலும், புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.