நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மகிழி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற வாழ் முனீஸ்வரர் கோயிலில் ஆனித்திருவிழா பூச்சொரிதலுடன் துவங்கியது.
முன்னதாக ஆலயத்தை சுற்றியுள்ள பரிவார தெய்வங்களுக்கு ஒவ்வொன்றாக பூச்சொரிதல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 32 அடி உயர வாழ் முனீஸ்வரருக்கும் பம்பை உடுக்கை முழங்க பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.