ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவிலிருந்து அரசு பேருந்து மூலம் குட்கா பொருட்கள் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சத்யமங்கலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்த கர்நாடகா அரசு பேருந்தில் 16 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.